districts

img

முட்டைக்கோஸ்க்கு உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யாமல் செடியிலேயே கருகும் கொடுமை

மதுரை, மே 16-

     முட்டைக்கோஸ்க்கு உரிய விலை கிடைக்காததால் கொடைக்கானல் அருகே உள்ள அட்டுவம்பட்டி கிராமத்தி லுள்ள சிறு-குறு விவசாயிகள் பலர் தங்கள் வயல்களில் விளைந்த முட்டைக்கோசை பறிக்காமல் அப்படியே விட்டுள் ளனர். இது குறித்து விவசாயி வைரபெருமாள் (67) கூறுகை யில் எனது விவசாய வாழ்க்கை யில் மொத்தச் சந்தையில் மிகக் குறைவான விலைக்கு முட்டைக்கோஸ் விலை போ னது இப்போது தான். கிலோ வுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரையே  கிடைத்தது. கடந்தாண்டு ஒரு  மூட்டை (பத்து கிலோ) முட்டைக் கோஸ் ரூ.1000-க்கு விற்கப் பட்டது. தற்போது ஒரு மூட்டை (பத்து கிலோ) ரூ.300-க்கு விற்கிறது. அதாவது ஒரு கிலோ அதிகபட்சம் ரூ.25 முதல்  ரூ.30 வரை தான் விற்கிறது என்றார்.

   இதே கிராமத்தைச் சேர்ந்த  மற்றொரு விவசாயி கூறுகை யில், பல காரணங்கள் இருந் தாலும், அதிக மகசூல் மற்றும்  முட்டைக்கோஸ் அதிக அள வில் விளைந்ததே விலை வீழ்ச்சிக்கு காரணம் என்றார்.  பறிக்கப்பட்ட காயை பாதுகாப்ப தற்கு உட்கட்டமைப்பு வசதி களை அரசு மேம்படுத்த வேண் டும். அல்லது மானியம் வழங்கவேண்டும். இதன் மூலம் எங்கள் மீதான சுமை குறையும் என்றார்.

   இது குறித்து கொடைக் கானலில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெ.பெருமாள்சாமியை தொடர்பு கொண்டு கேட்ட போது, விளைச்சல் அதிகரித்த தால் வரத்து அதிகமாக உள்ளது என்றார்.  மதுரையில் ஒரு கிலோ  முட்டைக்கோசுக்கு  ரூ.10 அல்லது அதற்கு மேல் கிடைக் கும் என்பதால், ஒட்டன்சத்திரம் மொத்தச் சந்தையை விட  மதுரை சந்தையில் விற்பனை  செய்வதையே பல விவசாயி கள் விரும்புவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

    ஒட்டன்சத்திரத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது: உழவர்சந்தையில் முட்டை கோஸ் கிலோ ரூ.20-க்கும்,  மொத்த சந்தையில் கிலோ ரூ. 12க்கும், சில்லறை விற்பனைக்  கடைகளில் ரூ-30க்கும் விற்கப்படுகிறது என்றார்.

சம்மங்கி பூ விலை கடும் வீழ்ச்சி

    மற்றொரு புறத்தில் சுட்டெ ரிக்கும் வெயில் சம்மங்கி பூ விற்கு விலையில்லை.

   திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி, செம் பட்டி, கன்னிவாடி, தாடிக் கொம்பு, வெள்ளோடு, சிலு வத்தூர் உள்ளிட்ட கிராமங்க ளில் சம்மங்கி, மல்லிகை, பன்னீர் ரோஜா, செண்டு மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட  பூக்கள் விளைகின்றன.

   சம்மங்கி பூ கிலோ ரூ. 5க்கு விற்கப்படுவதாக சின்னாளபட்டியை சேர்ந்த பூ விவசாயி அய்யம்பெருமாள் தெரிவித்தார். செடி வளர்க்க ரூ.1,000 செலவு செய்தேன். செவ்வாய்க்கிழமை திண்டுக் கல் அண்ணா பூ மார்க்கெட் டில் பூ வை விற்றதில் ரூ.300 தான் கிடைத்தது என்றார்.  

  இது குறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரி ஒருவர்  கூறியதாவது: சந்தையில் இன்று வரை நான்கு டன்  சம்மங்கி பூ விற்பனையாகா மல் உள்ளது. வழக்கமாக, கேரளாவில் இருந்தும் மற்ற பூ சந்தைகள், திருமண மண்ட பங்கள் மற்றும் வாசனை திர விய உற்பத்தியாளர்களிட மிருந்து சம்மங்கி பூ வகை களுக்கு மொத்தமாக ஆர்டர் கள் கிடைக்கும் என்றார்.

   ஆனால், சுட்டெரிக்கும் வெயிலாலும், முகூர்த்தம் இல்லாததாலும், பூ விவசா யிகள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர்.

   கடந்த வாரம், ஒரு கிலோ ரூ.100க்கு விற்ற சம்மங்கி, செவ்வாய்கிழமை கிலோ ரூ.5 ஆக சரிந்தது.