districts

சிபிஎம், விவசாயிகள் சங்க போராட்டத்தால் ஆக்கிரமிப்பு வாய்க்கால் நிலங்கள் அளவீடு

கும்பகோணம், ஆக.20 -

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கூகூர் கிராமத்தில் நூற்றுக் கணக்கான ஏக்கருக்கு பெரிய வாய்க்கால், கோழிபுத்து வடிவாய்க்கால், கன்னி வாய்க்கால், வெட்டுமால் வாய்க்கால் வழி யாக பாசனம் மற்றும் வடிவதற்கு வாய்க்கால்  இருந்து வந்தது.

     இந்நிலையில், தனிநபர்கள் பாசனத்திற் கான வாய்க்காலை ஆக்கிரமித்து பிளாட்  போட்டு விற்பனை செய்து வந்தனர். இதை  கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் திருவிடை மருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ஆக்கிர மிப்பை அகற்றி வாய்க்காலை தூர்வார வேண்டும். வாய்க்கால்களை காணவில்லை எனக் கூறி தொடர் போராட்டம் நடத்தினர்.

    அதனடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின்  கோரிக்கையை ஏற்று, விவசாயிகள் சங்க  ஒன்றியச் செயலாளர் ஜி.முருகன், வாலிபர் சங்க ஒன்றிய துணை செயலாளர் வெங்க டேசன் மற்றும் கிராம விவசாயிகள் முன்னி லையில் கும்பகோணம் வட்டாட்சியர், சார்நிலை நில அலுவலர்கள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற நில அளவீடு செய்த னர்.

    பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க் கால்களை அளவீடு செய்து, எல்லையை நிர்ணயம் செய்தனர். மேலும், வாய்க்காலை தூர்வாரி வருகிற பருவத்திற்குள் தண்ணீர் வர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.  

    விவசாயிகள் பிரச்சனைக்கு போராட்டம்  மூலம் தீர்வு கண்ட, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.