அறந்தாங்கி, ஜன.18- உழவர் திருநாளை முன்னிட்டு புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருவாப்பாடி கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவ கங்கை, தஞ்சை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. மாட்டுவண்டி ஜோடிகள் துள்ளிக்குதித்து ஒன்றையொன்று முந்தி சென்றது பார்வையாளர்களின் கண் களுக்கு விருந்தாக அமைந்தது. ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று கைதட்டி ஆரவாரத்து டன் பந்தயத்தை கண்டு ரசித்தனர். இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டுவண்டி உரிமையாளர் களுக்கு ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. மணமேல்குடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.