districts

img

சேமங்கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்

அறந்தாங்கி, ஏப்.25-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலை அடுத்த சேமங்கோட்டை கிராமத்தில் சித்திரை திருவிழாவையொட்டி தொடர் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. நடைபெற்ற பந்தயத்தில் புதுக் கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டி களும், 10-க்கும் மேற்பட்ட குதிரைகளும் கலந்து கொண்டன. போட்டியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்திருந்தனர். இந்த பந்தயத் தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்  பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.