districts

img

அமரசிமேந்திரபுரத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்

அறந்தாங்கி, ஏப்.24 - புதுக்கோட்டை மாவட்டம் அமரசி மேந்திரபுரம் சக்தி விநாயகர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, இளைஞர் கள் மற்றும் ஊர் பொதுமக்களால் 13 ஆம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி  பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயம் காலை மற்றும் மாலை என  இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் காலையில்  பெரிய  மாடு, கரிச்சான் மாடு,  நடுக்குதிரை என மூன்று பிரிவுகளாகவும், மாலையில் நடுமாடு, பூஞ்சிட்டுமாடு, சிறிய  குதிரை என 3 பிரிவுகளா கவும் நடைபெற்றன. புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டி களும், 10க்கும் மேற்பட்ட குதிரைகளும்  கலந்து கொண்டன.  இதனை பார்வையா ளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை  பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.2.22 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பை களும் வழங்கப்பட்டன.

;