districts

img

தமிழ்நாடு வங்கியை உருவாக்குக! வங்கி ஊழியர்கள் தர்ணா

புதுக்கோட்டை, ஆக.28 - மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி  மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு  வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என  வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் திங்கள் கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு  வங்கி ஊழியர் சங்கம் சார்பில் புதுக் கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் டி.திருப்பதி, துணைத் தலை வர் ஆர்.பாலகிருஷ்ணன், பொருளா ளர் ஆர்.கருப்பையா உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து விதொச  மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், சிஐ டியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க  மாவட்டப் பொருளாளர் கி.ஜெயபா லன், அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் விஏகே.மனோ கரன், இந்திய மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள் ளிட்டோர் பேசினர். மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி  மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும். மாவட்ட, நகரக் கூட்டுறவு வங்கி என  தரம் பிரிக்காமல் அனைத்து ஊழியர் களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத் திட வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கி  ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தினர்.