கும்பகோணம், மார்ச் 7- தஞ்சை - திருவாரூர் மாவட் டத்தை இணைக்கும் பருத்திச்சேரி - குடவாசல் இடையே உள்ள குட முருட்டி ஆற்றில் பொதுமக்கள் நலன் கருதி கான்கிரீட் பாலம் அமைக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவிடைமருதூர் ஒன்றியம் சார்பில் செம்மங்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால் கண்டன உரையாற்றினார். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டத்தை இணைக்கும் பருத்திச் சேரி குடவாசல் இடையே குட முருட்டி ஆறு உள்ளது. இங்கு பொது மக்களால் தற்காலிகமாக அமைக் கப்பட்ட மர ஆற்றுப்பாலத்தை கடந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தினமும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. அரசு உடனடியாக குடமுருட்டி ஆற்றில் கான்கிரீட் பாலம் அமைத்திட வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் சிபிஎம் சார்பில் நடைபெற்றன. ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த கோடைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் இல்லாதபோதே, கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகளை உடனே துவங்க வலி யுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பருத்திச்சேரி, கீரனூர், ஆரியசேரி, ஆடிப்புலியூர் கிராம மக்கள் பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு, போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் நாச்சியார்கோவில் காவல்துறை ஆய்வாளர் சுகுணா, திருவிடைமருதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருளானந்தம், ஊராட்சி பணி மேற்பார்வையாளர் சுகுமார், சாலை ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், இதற்கான திட்டப் பணி நடைபெற்று வருவதாகவும், அத்திட்டத்திற்கான உத்தரவு வந்தவுடன் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும் உறுதி யளித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப் பட்டது.