districts

ஜன்னலை உடைத்து திருட்டு

தஞ்சாவூர், ஆக.13-

     தஞ்சாவூர் கரந்தை செல்லப்பிள்ளையார் கோயில்  தெருவைச் சேர்ந்தவர் கே.நடராஜன் (52). இவர் பள்ளி யக்ரஹாரத்தில் ஒலி, ஒளி பெருக்கி நிலையம் நடத்தி வருகிறார். இவர், வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு  கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். மீண்டும்  சனிக்கிழமை காலை கடையைத் திறக்கச் சென்றபோது, பின்புறத்திலுள்ள சிமெண்ட் ஜன்னல் உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 காயில் வகை வயர்களை மர்ம  நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.