districts

பைக் ஆட்டோ மோதல் சிறுவன் பலி

 தஞ்சாவூர், ஜூன் 20-

     தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமன் மகன் அருள்முருகன் (16). திங்கள்கிழமை மாலை துறை யூரிலிருந்து வீட்டுக்கு சாமான்கள் வாங்குவதற்காக சேது பாவாசத்திரம் கடைவீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, எதிரே சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த நைனாமுகமது பேராவூரணி நோக்கி ஆட்டோவில் வந்து  கொண்டிருந்தார். துறையூர் வளைவில், எதிர்பாராத வித மாக மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேராக  மோதிக் கொண்டதில், அருள்முருகன் படுகாயமடைந் தார். அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.