districts

திருச்சி முக்கிய செய்திகள்

தொல்லியல்துறை, ஆட்சியர் வழங்கிய ஆவணங்கள் செல்லாதா?  

அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்

கும்பகோணம், மார்ச் 17- மத்திய தொல்லியல் துறை, மாவட்ட ஆட்சியர் வழங்கிய ஆவணங்கள் செல்லாது எனக் கூறி, அரண்மனை தேவஸ் தான நிர்வாகம் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் ஐரா வதீஸ்வரர் கோவில் மேற்கு பகுதியில்,  புறம்போக்கு இடத்தில் 48 குடும்பத்தை  சேர்ந்தவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக் கும் மேலாக குடியிருந்து வந்தனர். இந்நி லையில், கோவில் தோற்றத்தை மறைப்ப தாக கூறி, இந்திய தொல்லியல் துறை, உரிய இழப்பீட்டுத் தொகையுடன் மாற்று இடம் வழங்குவதாக தெரிவித்தது.  இதையடுத்து, 1988 ஆம் ஆண்டு  கோவிலில் இருந்து சிறிது தூரம் தள்ளி,  மத்திய தொல்லியல் துறைக்கு சொந்த மான இடம் எனக் கூறி, அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், மாற்று  இடம் வழங்கப்பட்டது. அங்கு ராஜராஜன்  நகர் என பெயர் வைத்து 48 குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர்.  ஆனால் அரண்மனை தேவஸ்தானம்  அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தாகவும், வாடகை தர வேண்டும். இல்லா விட்டால் வேறு நபர்களை குடியமர்த்தி விடு வோம் என மிரட்டுவதாகவும் அப்பகுதி யினர் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தொல்லியல்துறை, ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால்  மத்திய தொல்லியல்துறை, இது தங்க ளுக்கு சொந்தமான இடம் என மட்டுமே  கூறி பொதுமக்களை அனுப்பி வைத்துள் ளது. மனு மீது இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால் மீண்டும் பழைய இடத்திற்கு குடிபெயரும் போராட்டம் நடத்த உள்ளதாக, பொதுமக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், “தற்போது நாங்கள் வசிக்கும் இடம் மத்திய தொல்லியல் துறை யால் வழங்கப்பட்டது. எங்களுடன் வசித்த  பலரும் கோ.சி.மணி நகர், சமத்துவபுரம் என்ற நகர் அமைத்து வசித்து வருகின்ற னர். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நாங்கள் வசிக்கும் இடத்தை அரண்மனை தேவஸ்தான ஊழி யர்கள், “இது எங்கள் இடம்; மாத வாடகை நிலுவையில் உள்ளது. மத்திய தொல்லியல்துறை மற்றும் ஆட்சியர் வழங்கிய ஆவணங்கள் செல்லாது” என கூறுகின்றனர்.  இந்த மாதம் இறுதியில் வீடுகளை  இடித்து விடுவோம் எனவும் மிரட்டுகின்ற னர். மாதந்தோறும் வாடகை ரூ.500 வீதம்  ஆண்டுக்கு ரூ.6,000 செலுத்த வேண்டும்  என கூறுகின்றனர். இதுகுறித்து பல அதி காரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நட வடிக்கையும் இல்லை. நாங்கள் மிகுந்த  அச்சத்தில் உள்ளோம்” என்றனர்.

மனுக்களை  பெட்டியில் போடவும்

புதுக்கோட்டை,  மார்ச் 17 - மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி 16.3.2024 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இத னால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் முதலான அனைத்து திட்டங்கள் தொ டர்பான கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது.  எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர் பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள்  பெட்டியில் போடுமாறு புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி வித்துள்ளார்.

குடவாசலில் குளங்களை தூர்வாரி  நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூர், மார்ச் 17 - குடவாசலில் உள்ள அனைத்து குளங்களையும் முறையாக தூர்வாரி நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றியச் செயலாளர் கே.பகத்சிங் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.எஸ். ஜெய்கிஷ் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் புதிய நிர்வாகிகளை அறிவித்து உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவராஜ் மற்றும் ஒன்றிய, நகர வாலிபர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  பேரவையில் 8 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக பி.குமரேசன், செயலாளராக பா.ஆகாஷ், பொருளாளராக கா.பாலமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் 7 பேர் கொண்ட நகரக் குழுவிற்கு தலைவராக பா.பாஸ்கரன், செயலாளராக பா.லெ.சுகதேவ், பொருளாளராக மு.ஈஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  குடவாசல் திருக்குளத்திற்கு எதிரே உள்ள இலவச பொது கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குடவாசல் பேரூராட்சியில் உள்ள குளங்களை முறையாக தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். ஊராட்சிகளில் சாலை, குடிநீர், மின்விளக்கு ஆகிய அடிப்படை வசதிகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் இலவச பொது மருத்துவ முகாம் 

அறந்தாங்கி, மார்ச் 17 - புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூரில் இயங்கி  வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 6 ஆவது  நாளாக பெருநாவலூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு கல்லூரி  வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  முகாமின் ஒரு பகுதியாக, நாட்டு நலப்பணித் திட்டத்து டன் ரோட்டரி கிளப் ஆப் அறந்தை ஃபிரண்ட்ஸ், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.  கல்லூரி முதல்வர்(பொ) பேராசிரியர் வீ.பாலமுருகன் தலைமை வகித்தார். அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் முகாமைத் தொடங்கி வைத்து, மாணவர்களின் சேவைப் பணிகளைப் பாராட்டி னார். ரோட்டரி கிளப் ஆப் அறந்தை ஃபிரண்ட்ஸ் மாவட்ட  இணைச் செயலாளர் ஆடிட்டர் ரெ.தங்கதுரை, கிளப்பின்  தலைவர் முருகேசன், செயலாளர் சுப்பு, திட்டத் தலை வர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், ஆவுடையார்கோ யில் தன்னார்வலர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சுமார் 139  பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர் பரிசோதனை செய்து பயனடைந்தனர். 

அடிக்கல் நாட்டு விழா

பாபநாசம், மார்ச் 17 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, திமுக பாபநாசம் பேரூர் செயலர் கபிலன்,  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராஜ், பள்ளி  தலைமை ஆசிரியர் நீலாதேவி, திமுக சுற்றுச்சூழல் அணி  அமைப்பாளர் செல்வ முத்துகுமரன், துணை அமைப்பா ளர் கார்த்தி, சிறுபான்மை அணி அமைப்பாளர் அனிபா  உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

போதைப் பொருள் விற்ற பெட்டிக் கடைக்கு சீல்

கும்பகோணம், மார்ச் 17- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அரசியல்  தலைவர் கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவல்துறையினர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் போதைப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் காவல்துறை சரகத்திற்குட்பட்ட அய்யாவடி கிரா மத்தில், முருகன் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வரு கிறார். இக்கடையை உணவு பாதுகாப்பு அலுவலர் மருத வாணன் மற்றும் நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் சுகுணா ஆகியோர் சோதனையிட்டனர்.  அப்போது அந்தக் கடையிலிருந்து, குட்கா, கூலிப் ஹான்ஸ் போன்ற தடை செய்யப்பட்ட போதைப்  பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து சம்பந்தப் பட்ட கடைக்காரர் மீது வழக்குப் பதிந்து, போதைப் பொருட் களை பறிமுதல் செய்தனர். மேலும் பெட்டிக் கடைக்கு சீல்  வைத்தனர்.

மதுபாட்டில் விற்றவர் கைது

கும்பகோணம், மார்ச் 17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவல் உட்கோட் டத்தில் சட்டவிரோதச் செயல்களை தடுக்க காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர், சனிக்கிழமை நடத்திய சோத னையில், கும்பகோணம் மேற்கு காவல் சரகம் கும்ப கோணம் பிருமன்நகர், அரசலாறு வழிநடப்பைச் சேர்ந்த  அன்புரோஸ் (45) என்பவரை ஆய்வு செய்தனர். அப்போது, அவர் அரசு உரிமை எதுவுமின்றி, சட்டவிரோத மாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரிடமிருந்து 150 மது பாட்டில்களை பறிமுதல்  செய்த நிலையில், அவரை கைது செய்த தனிப்படையி னர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து சிறை யில் அடைத்தனர். கும்பகோணம் காவல் உட்கோட்டத்தில் யாரேனும் சட்ட விரோதமாக கஞ்சா, குட்கா  விற்பனை, சூதாட்டம்,  மது பாட்டில் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் உட்கோட்ட துணைக்  காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் எச்சரித்துள்ளார்.

ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல்

மயிலாடுதுறை, மார்ச் 17 -  மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு ஜிபிஎஸ் கேமரா பொருத்தப்பட்ட வாகனங்களில் தேர்தல்  பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு  அமைக்கப்பட்டு வாகன சோதனை செய்யும் பணி களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.  பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்ப னார்கோவில், மேலமுக்கூட்டு பகுதியில் தேர்தல் நிலை யான கண்காணிப்பு குழுவினர் கூட்டுறவு சார்பதிவாளர் நடராஜன் தலைமையில் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற காரில் சண்முகசுந்தரம் என்பவரால் உரிய  ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.30 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொ டர்ந்து ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் காரில் செல்வ கணபதி என்பவரால் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.56 லட்சம் ரொக்கப் பணமும் பறி முதல் செய்யப்பட்டது.  பறிமுதல் செய்யப்பட்ட 2.86 லட்சம் ரூபாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஒப்படைக்கப்பட்டது. உரிய  ஆவணங்களை செலுத்தி பணத்தை பெற்றுக் கொள்ள லாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டையில் தாய், மகன் மரணம் 
காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உண்மை அறியும் குழு வலியுறுத்தல்

மதுரை, மார்ச் 17- அருப்புக்கோட்டையில் தாய்,  மகன் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உண்மை அறியும் குழுவின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்  முரளி செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘‘விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர், அருப்புக்கோட்டை காந்தி நகரைச்  சேர்ந்த முன்னாள் கிராம அலுவல ரும் பாஜக நிர்வாகியுமான பிருத்தி விராஜ் என்பவர் வீட்டில் ரூ.2.60  லட்சம் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அருப்புக்கோட்டை காவல்துறையினர் பிப்ரவரி 25-ஆம் தேதி பிற்பகலில் கைது செய்  துள்ளனர்.  இதைத்தொடர்ந்து மாலையில் மாணிக்கத்தின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், அவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தி, மாணிக்கத்தின் மனைவி தேவியின் வங்கிக் கணக்கு புத்த கம், வீட்டில் இருந்த ரூ.60 ஆயிரம்,  மாணிக்கத்தின் மகனும் பட்டதாரி யுமான கர்ணனின் இருசக்கர வாக னம், அவரது கல்விச் சான்றிதழ்கள்  ஆகியவற்றை பறிமுதல் செய்த னர்.  மேலும் கர்ணனையும் அருப்புக்  கோட்டை நகர் காவல்நிலையத் துக்கு அழைத்துச் சென்று தந்தை மாணிக்கம், மகன் கர்ணன் ஆகிய  இருவரையும் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அப்போது காவல்நிலையம் வந்த பிருத்திவிராஜனின் ஆட்கள்  20-க்கும் மேற்பட்டோர் காவல்  நிலையத்திற்குள் புகுந்து மாணிக்  கத்தை சரமாரியாக தாக்கியுள்ள னர். மேலும் காவல்துறையினர், பிருத்திவிராஜனின் ஆட்களால்  தாக்கப்பட்ட மாணிக்கம் மயக்கம டைந்தார். இதையடுத்து அருப்புக்  கோட்டை அரசு மருத்துவ மனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.  அப்போது மாணிக்கம் வழக்க மாக சாப்பிடும் மாத்திரைகளை எடுத்து வரும்படி காவல்துறை யினர் கர்ணனை வீட்டுக்கு அனுப்பி யுள்ளனர். அவருடன் உறவினர்கள்  யாரையும் செல்ல அனுமதிக்க வில்லை.  இந்நிலையில் வீட்டுக்குச் சென்ற கர்ணன் வெகு நேரமாக வராததால் உறவினர்கள் சென்று பார்த்தபோது, அங்கு கர்ணன் தூக்குப் போட்ட நிலையில் சட லமாக இருந்துள்ளார். அவரது காது உள்பட பல்வேறு பகுதிகளில்  ரத்த காயங்கள் இருந்துள்ளன.

இதையடுத்து அவரது உடற்கூறாய்  வுக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளது.  இந்நிலையில் கர்ணனின் உடற்கூறாய்வுக்கு அவரது தாய் தேவி ஒப்புதல் தர மறுத்து, மக னின் மரணத்துக்கு நீதி கேட்டு  விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம்  பிப்ரவரி 26-ஆம் தேதி மனு  அளித்துள்ளார். ஆட்சியர் வரு வாய் கோட்டாட்சியர் விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்  கிடையில் கர்ணனின் உடலை வாங்காவிட்டால் காவல்துறையே அடக்கம் செய்யும் என்று காவல் துறையினர் மிரட்டியதால் உடலை  வாங்க தேவி சம்மதம் தெரிவித் துள்ளார்.  இதையடுத்து தேவி, அவரது  மகள் கனிமொழி, தங்கை மகள்  அழகுபாண்டி ஆகியோரை காவல்துறை வாகனத்தில் விருது நகர் அரசு மருத்துவமனைக்கு காவல் ஆய்வாளர் கீதாதேவி அழைத்துச் சென்றார். அப்போது உறவினர்கள், மூவரையும் தங்கள்  வாகனத்தில் அழைத்து வருவதா கக் கூறியும் காவல்துறை வாக னத்தில் அழைத்துச் சென்றுள்ள னர்.  திடீரென தேவி, ஓடும் வாக னத்தில் இருந்து கீழே விழுந்து  தலையில் பலத்த காயமடைந்துள் ளார். அப்போது தேவியை அருகில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், தொலைவில் உள்ள  விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ள னர். அங்கு தேவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.  இந்த மரணங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தானே முன்வந்து  வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். இருவரின் மரணத்துக் கும் அரசு இழப்பீடாக தலா ரூ.25  லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு  அரசுப்பணியில் வழங்க வேண்டும். கர்ணன், தேவி ஆகியோரின் மர ணத்துக்கு காரணமாக காவல் துறையினர் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என்  றார்.