அறந்தாங்கி, ஜூலை 16-
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஆவுடையார்கோ வில் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் முனை வர் ரெ.பிச்சைமுத்து தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் த.தாமரைச் செல்வன் துவக்கி வைத்தார்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் வீரபாலன், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமிகாந்தன் ஆகியோர் பரிசு கள் வழங்கி பாராட்டினர்.
இப்போட்டிகளில் முதலிடம் பிடித்த வர்கள் திங்கள்கிழமை புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டி யில் கலந்து கொள்வர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு புத்தகத் திருவிழா மேடையில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டுவார்.