districts

img

அன்னை சத்யா இல்லத்தில் புத்தக தின விழா

புதுக்கோட்டை, ஏப்.25 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குழந்தை கள் நல குழுமம், செஸ்டாட்ஸ் அமைப்புகள்  சார்பில் புதுக்கோட்டை அன்னை சத்யா இல்லத்தில் உலகப் புத்தக தினத்தை (ஏப்.23)  ஒட்டி மரம் நடுதல், கருத்தரங்கம், நூல் வெளி யீடு, தொலைநோக்கி மூலம் வான் நோக்கு தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு குழந்தைகள் நல குழு மத்தின் மாவட்டத் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார். சாமிநாதன் வரவேற்றுப்  பேசினார். மாவட்டச் செயலாளர் வீரமுத்து  அறிமுக உரையாற்றினார். இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமார் எழுதிய ‘ஏவூர்தி’ மற்றும் ‘சைக்கிள்’ ஆகிய இரு நூல்களை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன  மூத்த விஞ்ஞானி முனைவர் ஆர்.ராஜ்குமார்  வெளியிட மரம் ராஜா நூல்களைப் பெற்றுக்  கொண்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன்  உலக புத்தக தின விழா கருத்துரை ஆற்றி னார். வம்பன் அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். சத்யா இல்லத்தில் பயிலும்  அனைத்து குழந்தைகளுக்கும் மரக்கன்று களும், புத்தகங்களும் வழங்கப்பட்டன.  இரவு 7 மணிக்கு தொலைநோக்கி மூல மாக நிலவு காண்பிக்கப்பட்டது. நிலவு குறித்து குழந்தைகளுடன் உரையாடல் நடத்தப்பட்டது. தொலை நோக்கி மூலமாக நிலவைப் பார்த்த குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்வில் வளர்மதி இதழின் ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் சத்யா இல்லப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் விமலா  நன்றியுரை ஆற்றினார்.

;