சிவகங்கை, நவ.19- சிவகங்கை தொல்நடை குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகி யோர் காளையார் கோவில் பாண்டி யன் கோட்டைப் பகுதியில் மேற் கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் எலும்பாலான பழங்காலக் கருவி, பானையோட்டுக் குறியீடு, சங்க கால மேற்கூரை ஓட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. இதுகுறித்து சிவகங்கை தொல்நடை குழு நிறுவநர் புல வர் கா.காளிராசா செய்தியாளர்களி டம் கூறுகையில், ‘‘காளையார் கோவிலில் சங்க காலத்தோடு தொ டர்புடைய பாண்டியன் கோட்டை பழமையான தொல்லியல் மேடாக அமைந்துள்ளது. இங்கு சிவ கங்கை தொல்நடை குழுவினர் அவ்வப்போது மேற் பரப்பு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர். இதில் தொடர்ச்சியாக பழங்கா லப் பொருட்கள் கிடைத்து வரு கின்றன. வட்ட வடிவிலான கோட்டை பழங்கால கோட்டை வட்ட வடி வில் அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 33 ஏக்கர் பரப்பள வில் நடுப்பகுதியில் நீராவி குளத்து டன் புறநானூற்றிலே சொல்லப்படு கிற 21 ஆவது பாடலின் படி ‘குண்டு கண் அகழி’ ஆழமான அகலமான அகழியை உடையதாக இக கோட்டை அமைத்திருந்ததை எச் சங்களின் வழி அறிய முடிகிறது. கோட்டையின் இலக்கணங்க ளோடு கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவிலும் தெற்குப் பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் அமைந் துள்ளன. இவை கோட்டை காவல் தெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கிடைக்கும் தொல் எச்சங்கள் மேற்பரப்பு கள ஆய்வில் தொடர்ச்சியாக தொன்மையான எச்சங்கள் சிவகங்கை தொல் நடை குழுவினரால் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. இதில் வட்டச் சில்லுகள், பானை ஓட்டு எச்சங்கள், பானை ஓட்டுக் கீறல்கள், குறியீடு கள், சங்ககால செங்கல் கற்கள், எடைக்கல் போன்றவைகள் கிடைத் துள்ளன. தமிழி எழுத்து தமிழி எழுத்துப் பொறிக்கப் பட்ட பானை ஓடு கிடைத்தது.
இதில் சங்க காலப் புலவர் மோசுகீரனார் போன்று மோசிதபன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது. எலும்பு முனைக்கருவி தற்போது வட்டச் சில்லுகள், பானை ஒட்டுக் குறியீடுகள், எலும் பாலான முனையை உடைய கருவி, பழங்கால கூரை ஓட்டு எச்சங்கள் கிடைத்திருக்கின்றன. இதில் எலும்பாலான முனையை உடைய கருவி அரிதானதாகும். எலும்பை தேர்வு செய்து அதன் முனையை கூர்மையாக்கி அம்பு போன்ற பயன்பாட்டிற்காகவோ அல்லது நெசவு செய்யும் கருவி யாகவோ இக்கருவியை பயன் படுத்தி இருக்கலாம். இவ்வா றான பொருள் கீழடி போன்ற அக ழாய்வு இடங்களில் கிடைத்திருக் கின்றன. இவை மனிதனின் வாழ்வி டப் பகுதி என்பதை உறுதிப்படுத்து வதாகக் கொள்ளலாம். ஓரிரு மாதங்களுக்கு முன் சிவ கங்கை தொல்நடை குழுவினரால் காளையார்கோவில் எனப்படும் கானப் பேரேயிலின் பழங்கால ஈமக்காட்டு கல்வட்ட எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை தொல்நடை குழு மேற்கொண்ட முயற்சியின் படி, இவ்விடம் தொல்லியல் துறை யால் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்ற தகவல் பெறப்பட்டுள்ளது. இவ்வி டத்தில் முறையான தொல்லியல் துறை அகழாய்வு செய்யும் போது பழமையான சங்க கால கோட்டை அமைப்பு மனித வாழ்வியல் பகுதி வெளிப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை’’ என்று தெரி வித்தார்.