districts

img

4-வது நாளாக கடல் உள்வாங்கியது: குமரியில் படகு போக்குவரத்து தாமதம்

நாகர்கோவில், செப்.18- கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் கடந்த 15 ஆம் தேதி முதல்  காலை நேரத்தில் மட்டும் தாழ்ந்து  உள் வாங்கி வருகிறது. இதனால் நான்கு நாட்களாக காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு  மண்டபத்துக்கு படகுபோக்கு வரத்து தாமதமாக தொடங்கப்பட்டு  வருகிறது.  கடல் இயல்புநிலைக்கு திரும்பிய பிறகு 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்குத்தான்  படகு போக்குவரத்து தொடங்கு கிறது. கன்னியாகுமரி கடலில் சுனா மிக்கு பிறகு அடிக்கடி கடல் உள் வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ் வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, பேர லைகள் சீற்றத்துடன் எழும்புவது, அலையே இல்லாமல் கடல் அமை தியாக குளம்போல் காட்சி யளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. குறிப்பாக  அமாவாசை, பவுர்ணமி போன்ற  நாட்களில் இந்த இயற்கை மாற்றங் கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் காலையில் மட்டும் கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம்  தாழ்ந்து உள் வாங்கி காணப்படு கிறது. இதனால் கன்னியாகுமரி கடல்  நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபத்துக்கு திங்க ளன்றும் (செப்.18) 3 மணி நேரம்  தாமதமாக காலை 11 மணிக்குத் தான் படகு போக்குவரத்து தொடங் கியது. அதன் பிறகு சுற்றுலா பய ணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். திரு வள்ளுவர் சிலைக்கும் விவேகா னந்தர் மண்ட பத்துக்கும் இடையே  பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம்,  கீழமணக்குடி, மணக்குடி போன்ற  கடற்கரை கிராமங்களில் கடல்  சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. இதனால் திங்களன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு  சவாரி நடத்தப்படவில்லை. இதனால்  சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.