districts

img

பொன்மலையில் நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதைகள் அடைப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 9 - நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதை அடைக்கப்படுவதை எதிர்த்து மேல கல்கண்டார் கோட்டை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு  பணிபுரியும் ஊழியர்களுக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. இந்த குடியிருப்பு களின் வழியாக மேல கல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் பொன்மலை மாஜி ராணுவ  காலனி உள்ளிட்ட பகுதி மக்கள் ரயில்வே குடியிருப்புகளின் வழியாக பள்ளிகள், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்த னர்.  இந்நிலையில், தற்போது குடியிருப்பு  பகுதிகள் காலியாக இருப்பதால் அந்த  பகுதியில் ரயில்வே பணிமனை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் நூறாண் டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதைகள் அடைக்கப்படும் என  ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளி யிட்டது.  இதையடுத்து பொதுமக்களும், வியாபாரிகளும் பள்ளி செல்லும் குழந்தைகளும் மிகுந்த சிரமம் அடை வார்கள். எனவே பாதைகளை ரயில்வே  நிர்வாகம் அடைக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி தலைமை யில், சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரி களிடம் மனு அளித்தனர். ஆனால் இது வரை மனு மீது எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக 50,000 பொதுமக்கள் பயன் படுத்தி வந்த சாலையை அடைத்து பொதுமக்களை திண்டாட வைத்த ரயில்வே நிர்வாகத்தின் அதிகார வன்முறையை கண்டித்தும், மேல கல்கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார்  கோட்டை, மாஜி ராணுவ காலனி, அம்பி காபுரம், நாகம்மை வீதி, மகாலட்சுமி நகர், மாருதி நகர், மூகாம்பிகை நகர்,  ஆலத்தூர் பகுதி மக்கள் குடியிருப்புக்கு  சென்று வர சாலை அமைத்து தர கோரி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அரு கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் பொன் மலை பகுதிச் செயலாளர் விஜயேந்தி ரன் தலைமை வகித்தார்.  மாநிலக் குழு  உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்டச் செயலா ளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கார்த்திகேயன், மாறன், டிஆர்டியு உதவி பொதுச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.