விருதுநகர், நவ.24- இந்து மக்களின் நம்பிக்கை யாக உள்ள மலைகள், கோவில் களைக் கூட பணத்திற்காக பாஜக வினர் விற்று விடுவார்கள் என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர் களை சந்தித்த அவர் மேலும் கூறி யதாவது: அமெரிக்காவில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள் ளது. பிரதமர் மோடி, அதானியை காப்பாற்ற தொடர்ந்து முயற்சி செய்து வருவது நாட்டுக்கும், பொருளாதாரத்திற்கும் நல்ல தல்ல. அமெரிக்க கம்பெனியுடன் சேர்ந்து ஒப்பந்தம் போட்டு ரூ.25 ஆயிரம் கோடியை அதானி இந்தி யாவிற்கு கொண்டு வந்துள்ளார். அப்பணத்தை சூரிய மின் சக்தி திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என அங்குள்ள மக்களை ஏமாற்றி அந்த பணத்தை கொண்டு வந்துள்ளார். அதேவேளை, அதிகமான விலைக்கு மின்சாரத்தை மாநில அரசுகள் வாங்கும் என நினைத் தார்கள். ஆனால், அதிக விலை கொடுக்க மாநில அரசுகள் தயார் இல்லை. எனவே, 2500 கோடி லஞ்ச மாக தர வேண்டுமென அங்கு பொய்யை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை, அதானியின் போக்கை மோடி முழுமையாக ஆதரிக்கி றார். அவரை காப்பாற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என பகிரங்கமாக கூறுகிறோம். இப்படிப்பட்ட குற்றச்சாட்டு வேறு எங்கோ சொல்லப்பட்டி ருந்தால் இது மிகப்பெரிய பிரச்ச னையாக மாற்றப்படும். ஆனால், தற்போது இந்த மிகப்பெரிய பிரச்ச னையில் அதானியை குறைந்த பட்ச விசாரணைக்கு கூட அழைக்க வில்லை. 2023 நவம்பர் முதல் இந்த பிரச்சனை நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து இந்தியா கூட்டணி யில் உள்ள அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அதானியின் தொழில் முறைகள் உள்ளன. வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். அதானி ஒரு குற்ற வாளி. அவரைப் பற்றி பேசவே தயார் இல்லாத பிரதமராக மோடி உள்ளார். ஆனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என இல்லாத ஒன்றை பேசு கிறார். கூட்டணி கட்சிகள் சீட்டுடன் பண மும் கேட்கின்றனர் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியதற்கு, ஒன் பிளஸ் ஒன் ஆபருடன் தான் அதிமுக உள் ளது. 1999க்கு பின் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வில்லை. பாமக, தேமுதிக உள் ளிட்ட கட்சிகள் தான் இதைப்பற்றி கூற வேண்டும். அதிமுகவின் பொருளாளராக உள்ளார் என பதிலளித்தார். அதானிக்கு எந்த ஒப்பந்தமும் தரவில்லையென தமிழக மின் துறை அமைச்சர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, பாஜக ஆளும் மாநிலங்களில், போட்டியின்றி அதானிக்கு டெண்டர் தந்துள்ள னர். மேலும், அதானிக்கு விதிமுறை களை மீறி சிவப்புக் கம்பளம் விரித்து தொழில் துவங்க வாய்ப்பு தந்துள்ளனர். இது தவறு. எல்லா ருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு தர வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதேவேளை, அதிமுக ஆட்சி காலத்தில் அதா னிக்கு தமிழகத்தில் டெண்டர் தந்துள்ளனர் என தெரிவித்தார். மதுரை விமான நிலையம் விரிவாக்கம் குறித்த கேள்விக்கு, கடந்த மதுரை விமான நிலைய விரி வாக்கத்திற்கு 650 ஏக்கர் தேவை யுள்ளது. இப்பணி கடந்த 2009 இல் அதிமுக ஆட்சிகாலத்தில் செய்யப் படவில்லை. நிலங்களுக்கு உரிய நிவாரணத்தை மாநில அரசு தந் துள்ளது. உயர்நீதிமன்றத்தில் இப்பிரச்சனை உள்ளது. விமான நிலையப் பணிகளும் பாதிக்கக் கூடாது. அதேவேளை பொது மக்க ளுக்கான நியாயத்தையும் நீதி மன்றம் வழங்க வேண்டும் என் றார். அரிட்டாபட்டி போராட்டம் குறித்த கேள்விக்கு, ஒன்றிய அரசு கடந்த 2023 செப்டம்பரில் ஒரு சட்டம் கொண்டு வந்தது. முன்பு, மாநில அரசு, சுரங்கம் தோண்டும் இடத்தை தேர்வு செய்து பரிந்துரை செய்யும் வகையில் சட்டம் இருந் தது. ஆனால், அச்சட்டத்தை ஒன் றிய அரசு மாற்றிவிட்டது. அதில் சுரங்கம் தோண்டும் இடத்தை ஒன்றிய அரசே தேர்வு செய்து, தோண்டுவதற்கான நிறுவனத்தை யும் முடிவு செய்யும். இதுகுறித்த தகவலை மட்டும், மாநில அரசுக்கு தெரிவிக்கும் வகையில் சட்டத்தை மாற்றியுள்ளது. அந்த வகையில், ஆந்திராவில் உள்ள பாப்பலாபுரத்திலும், நாயக்கர் பட்டியிலும் சுரங்கம் தோண்ட வேதாந்தாவின் துணை அமைப்பான இந்துஸ்தான் சிங் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி யுள்ளது. இதனால் அழகர்கோவில் மலையும், அரிட்டாபட்டியின் வர லாறும் அழிக்கப்பட்டு விடும். இந்துக்களின் முக்கிய நம்பிக் கையாக உள்ள கோவில்கள், மலைகளைக் கூட பாஜகவினர் பணத்திற்காகவும் அவர்களின் நண்பர்களுக்காகவும் விட்டு வைப்பதில்லை. அதை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்க தயாராகி விட்டனர் இதுகுறித்து பிரதமருக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளேன். மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் மற்றும் தூத் துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோருடன் இணைந்து இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள் ளோம் என தெரிவித்தார்.