districts

img

பாஜகவின் பலம் வாக்கு சதவீதத்தில் அம்பலப்படும்

புதுக்கோட்டை,  பிப்.16 - பணபலத்தை நம்பும் பாஜகவின் பலம், தேர்தல் வாக்கு சதவீதத்தில் அம்ப லப்படும் என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியா ளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “மேகதாது அணை விவகாரத்தில் தமிழ் நாடு அரசு எந்த ஒப்புத லும் தரவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் திலும், ஆணையத்திலும் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அதிகாரி கள் உரிய வாதங்களை எடுத்து வைத்து வருகின்ற னர். தற்போது பணபலத்தை  வைத்துக் கொண்டு பாஜக வினர் பல வேலைகளைச் செய்து வருகிறார்கள். பல மான கட்சியாகக் காட்டிக்  கொள்ள முயற்சிக்கிறார் கள். தேர்தல் முடிவுகளில் அவர்களின் பலம் என்ன வென்பது வாக்கு சதவீதத் தில் அம்பலப்படும். தமிழ் நாடு, புதுச்சேரியில் 40-க்கு  40 இடங்களையும் திமுக கூட்டணி பிடிக்கும்” என்றார்.