districts

img

கவிஞர் தங்கம்மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான விருது

புதுக்கோட்டை, அக்.30 - சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய விருது புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் தங்கம்மூர்த்திக்கு புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப் பட்டது. எஜூகேஷன் பிளஸ் பத்திரிகையும், ஹைப் எட்ஜ் நிறுவனமும் இணைந்து,  இந்தியாவில் சிறந்த கல்வியாளர் களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை புதுதில்லியில் நடத்தியது. இந்த விரு துக்கு நாடு முழுவதும் இருந்து 100  கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். அந்த 100 பேரில், 10 பள்ளி முதல் வர்களுக்கான சிறப்பு விருதினையும் அந்நிறுவனம் அறிவித்தது. அந்த 10 முதல்வர்களில் ஒருவராக புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். கல்வி யைத் தாண்டி பிற துறைகளில் சிறந்த  மாணவர்களை உருவாக்கி வருவதற் காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் செயல்பட்டு வரும் தங்கம்மூர்த்தி, ஏற்கனவே தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதையும், தேசிய நல்லாசிரியர் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடைக்கோடி ஏழைக்கும் தரமான கல்வி நிகழ்வில் விருதாளர்களின் சார்பில்  கவிஞர் தங்கம்மூர்த்தி பேசுகையில், தொழில்நுட்பங்களை நோக்கி கல்வி நகர்கிறது. தொழில் நுட்பங்கள் வகுப்ப றைகளை ஆக்கிரமித்த போதும் இந்திய  கிராமங்களில் வசிக்கிற கடைக்கோடி ஏழைக்கும் என்றைக்கு கல்வி சென்று சேர்கிறதோ, அன்றைக்குத்தான் கல்வி அர்த்தப்படும். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கவும், மாணவர்களை செதுக் கவும், எல்லோருக்கும் கல்வியை பார பட்சமின்றி வழங்கவும் ஆசிரியர்கள் முன்வர வேண்டும்” என்றார்.