தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதன் அருகில் உள்ள மின்கம்பம் வளைந்த நிலையில் எந்நேரத்திலும் உடைந்து விழ காத்திருக்கிறது. எனவே விபத்து ஏற்படும் முன், பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.