தஞ்சாவூர், ஆக.27-
தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் இணைந்து தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தின.
இந்நிகழ்வுக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தின ராக வேளாண் செம்மல் முனைவர் ஜோஸ்பின் கலந்து கொண்டு, தேனீ வளர்ப்பு முறை, தேனீ வளர்ப்பின் மூலம் தொழில் துவங்க ஆலோசனை மற்றும் தேனின் மருத்துவ குணங்கள் குறித்தும் பேசினார். இதில் 200 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.