புதுக்கோட்டை, ஜூலை 17-
புதுக்கோட்டை அருகே செம்பாட்டூர் வழியாக தண்ணீர்பந்தல்பட்டிக்கு திங் கள்கிழமை முதல் பேருந்து இயக்கப் பட்டது. இது அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்கு கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள் கொண்டாடினர்.
புதுக்கோட்டை ஒன்றியம் செம்பாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்தில் பகுதிநேர அங்காடி திறக்க வேண்டும். செம்பாட்டூர் வழியாக தண்ணீர் பந்தல்பட்டி கிராமத்திற்கு காலையும், மாலையும் அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும். பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டிக்குப் பதிலாக புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். குடிநீர்த் தேவைக்காக புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த ஜூலை 13 அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலி கமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், புதுக்கோட்டையிலிருந்து செம்பாட்டூர் வழியாக தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு திங்கள்கிழமை முதல் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இது அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள் பேருந்தை வரவேற்றுக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் விதொச மாவட்டச் செய லாளர் டி.சலோமி, ஒன்றியச் செயலாளர் சி.ராஜா, செம்பாட்டூர் ஊராட்சி மன்ற தலை வர் செ.மாணிக்கம் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.