தூத்துக்குடி, ஆக.5-
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தூய பனிமயமாதா பேரா லயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16- வது தங்கத்தேர் திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி சனிக்கிழமையன்று நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு பங்கு தந்தை குமார் ராஜா நடத்திய முதல் திருப்பலியும், 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன.
தங்கதேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி நடத்தினர். அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னான்டோ ஆகி யோர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடைபெற் றது. மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு 82-வது நிகழ்ச்சியாக பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.தூய பனி மயமாதா பேராலயத்தின் தங்கத்ரோரோட்ட திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட் டத்திற்கு சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார், உள்பட இறை மக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். திரு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட னர்.