districts

பி.96 பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

பேராவூரணி, ஏப்.17-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து ஆவுடையார்கோவில் வரை செல்  லும் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்  என மணக்காடு கிராமத்தை சேர்ந்த  ஆறுமுகம், கிராம மக்கள் சார்பில், பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபா கரனுக்கு  கிராம மக்கள் கோரிக்கை மனு  அளித்துள்ளனர்.  அந்த மனுவில், ‘‘பேராவூரணியில் இருந்து ஆதனூர், மணக்காடு, மங்கள நாடு, சுப்பிரமணியபுரம், நாகுடி வழியாக ஆவுடையார்கோவில் வரை தடம் எண் பி-96 என்ற புதிய வழித்தடத்தில் நாள் ஒன்  றுக்கு நான்கு முறை பேருந்து இயக்கப்  பட்டது.

இதனால், சுமார் 33 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, மாணவர்கள், விவ சாயிகள், பெண்கள், அரசு அலுவலர்கள் பயனடைந்தனர். இந்நிலையில், கடந்த ஆட்சியில் பேருந்து இயக்கம் படிப்படியாக குறைக் கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு  கொடுக்கப்பட்டது. இதன் பயனாக பேருந்து மீண்டும் இயக்கப்பட்டு மறுபடியும் சில மாதங்கள் கடந்த நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போதைய  பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமார் வேண்டுகோளின் படி, ஒரு  சில தினங்கள் இரண்டு முறை பேருந்து இயக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வரு டத்திற்கு மேலாக பேருந்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

எனவே, தடம் எண். பி-96 பேருந்தினை பேராவூரணியில் இருந்து ஆதனூர், மணக்  காடு, மங்களநாடு, சுப்பிரமணியபுரம், நாகுடி வழியாக ஆவுடையார்கோவில் வரை பேருந்தை நாள் ஒன்றுக்கு 5 முறை இயக்க வேண்டும்.  பேருந்து இயக்கம் நடைபெறாவிட் டால் அனைத்து கிராம மக்களையும்,  அனைத்துக் கட்சி  பிரமுகர்களையும் ஒருங்கிணைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம், சாலை  மறியல் போராட்டம் நடத்தப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.