districts

img

மருங்காபுரியில் விழிப்புணர்வு பேரணி

திருச்சி, நவ.17- திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்கா புரி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த விழிப்பு ணர்வு பேரணி புதனன்று காலை 10 மணி யளவில் மேட்டுப்பட்டி அரசு உயர்நிலைப்  பள்ளியிலும், பகல் 12 மணியளவில்  கோவில்பட்டி அரசு மேல்நிலைபள்ளியி லும் நடைபெற்றது. மருங்காபுரி வட்டார கல்வி அலுவலர் முன்னிலையில் வளநாடு காவல் நிலையம் உதவி காவல் ஆய்வாளர் பேரணியை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.  பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள். தசை பயிற்சி நிபு ணர் மற்றும் கணக்காளர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை கள் ஏந்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.