திருவாரூர், ஆக.11 -
திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் நடந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டி.பி.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொ ழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில், கல்லூரி மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும் படம் திரையிடப்பட்டது.
பேரணி புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. இதில் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, நன்னிலம், குட வாசல் அரசு கலை கல்லூரிகள் மற்றும் ராபி யம்மாள் கலை கல்லூரி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை கல்லூரி என 5 கல்லூரிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், குடவாசலில் நடைபெற்ற பேர ணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா தலைமையேற்றார். இதில் குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை மது விலக்கு அமலாக்கப்பரிவு காவல் ஆய்வாளர் மணமல்லி, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். காவல் துணை ஆய்வாளர் சங்கர நாராயணன், பள்ளி துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
பாபநாசம்
பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலை யம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரி தான்ஸ்ரீ உபையதுல்லா மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் விமலா வரவேற்றார். பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் லட்சுமி முன்னிலை வகித்தார். ஆய்வாளர் பகவதிசரணம் சிறப்புரையாற்றி னார். பின்னர், மாணவ-மாணவிகள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.