புதுக்கோட்டை, ஜூன் 13-
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் சார்பாக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வி.விக் டோரியா தலைமை வகித் தார். குழந்தைத் தொழிலா ளர் ஒழிப்பின் முக்கியத்து வம் குறித்து மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் கே.சதாசிவம், நலக்குழும உறுப்பினர் எம்.சுவாமிநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை வழங்கிய மாணவர்களுக்கு சான்றி தழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ், மாவட் டக் கல்வி ஆய்வாளர் குரு. மாரிமுத்து ஆகியோர் பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சி யை பள்ளி ஆசிரியர் த. ரேவதி ஒருங்கிணைத்தார். நிகழ்வில் பள்ளி மாணவர் கள், ஆசிரியர்கள் பங்கேற்ற னர்.