திருச்சிராப்பள்ளி, ஜன-21- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான, மாபெரும் கண்காட்சி மற்றும் சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்கும் வகை யில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான விழிப்புணர்வுக் கூட்டம் திருச்சி யில் தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்; நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர், அரி யலூர் மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனை வோர்கள் மற்றும் மாவட்ட அளவிலான தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக பொருளாதார மேம் படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து முதலமைச்சரின் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியம் 35 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரகப் பொருளாதாரத்தை மட்டும் மேம்படுத்தாமல், தொழில் வளர்ச்சியை யும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தொழில் முனைவுத் திட்டங்கள் தற்பொழுது செயல்படுத்தப்படுகின்றன. மேலும், வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் வட்டியில் மானியமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 45 சதவிகிதம் மானியமாக கிடைக்கின்றது. தாட்கோ மூலம் தொழில் தொடங்கும் புதிய தொழில் முனைவோர்க ளைக் கண்டறியும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாபெரும் கண்காட்சி மற்றும் சிறப்புக் கருத்தரங்கம் குறித்த விழிப்புணர்வு வாக னத்தை தாட்கோ மேலாண்மை இயக்கு நர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.