districts

img

வங்கி சேவை குறித்த  விழிப்புணர்வு பிரச்சாரம்

பேராவூரணி, டிச.12-  வங்கி சேவை குறித்து பொதுமக்களுக்கு தெரியப் படுத்தும் விதமாக பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு, பேராவூரணி வங்கி முதன்மை மேலா ளர் சூரியேந்திரன் தலைமை வகித்தார். மண்டல அலு வலக முதன்மை மேலாளர் காசிவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். வங்கி வளாகத்திலிருந்து தொடங்கிய பிரச்  சார பயணம் அண்ணாசிலை, ஆவணம் சாலை, பழைய  ஸ்டேட் வங்கி வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறை வடைந்தது.  பிரச்சாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் வீட்டுக்  கடன், தனிநபர் கடன், தொழில் கடன், தங்கநகை அடகு  கடன், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை எளி தாக பெறுவது குறித்தும், வங்கியில் புதிய கணக்குகள் துவங்குவது குறித்தும் வங்கி அலுவலர்கள் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

;