districts

திருச்சி முக்கிய செய்திகள்

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பங்காற்றியவர்களுக்கு விருது

கரூர்,டிச.21-  தமிழ்நாடு சமூகநலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்கு மேல் 18  வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசியபெண் குழந்தை தினமான ஜனவரி 2023-24 ஆம் அரசின் விருதுக்கான காசோலை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்ட உள்ளது. மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய் திருத்தல் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவி யங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள்  மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண் களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில் வீரநீர செயல் புரிந்திருக்க வேண்டும். மேற்காணும் விருதினை பெற குழந்தையின் பெயர் தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகிய வற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீரதீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைத்து உரிய முன் மொழிவுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து 16.12.2023 முதல் 31.12.2023 வரை (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பதாரர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியரகம் கரூர் என்ற அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

சோழபுரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் இடமாற்றம் 

தஞ்சாவூர், டிச.21 -  சோழபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து, வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும், பல்வேறு துறை கள் மூலம் பெற்று வரும்  வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு, தமிழக முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி ”மக்களுடன் முதல்வர்” என்ற பெயரில் புதிதாக திட்டம் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.  இந்த சிறப்பு முகாம், தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் பேரூராட்சியில் டிசம்பர் 23 சனிக்கிழமை அன்று சோழ புரம் கீழவீதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடத்திட தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்நேர் வில் தற்சமயம் நிர்வாக காரணங்களால் சோழபுரம் பேரூ ராட்சியில் அமைந்துள்ள ஜி.எஸ்.டி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்படி ஜி.எஸ்.டி திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

சுற்றித்திரியும் கால்நடைகளால்  தொடரும் விபத்துகள்

பொன்னமராவதி,டிச,21- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூ ராட்சி நகர் பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் இரவுநேரங்களில் விபத்துகள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஏனாதியைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பவர் புதனன்று இருசக்கர வாகனத்தில் வந்தபோது, மாடு குறுக்கே வந்ததால் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.அவரை மீட்ட பொதுமக்கள் வலையப்பட்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். நகர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட  கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

மதுரை, டிச.21-  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் வெள்ளப் பகுதியில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம்  பகுதியைச் சேர்ந்த காவலர் பெருமாள், கர்ப்பிணியான அவரது மனைவி அனுசுயா மயில் (27), சேது லட்சுமி (54),  ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு பேரும் சூலூரில்  இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு  மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டனர்.  இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து  ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை யில் சேர்த்தனர். நிறைமாத கர்ப்பிணி பெண்  அனுசுயா மயிலுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை யில் புதனன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.  தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி யுள்ளனர்.

இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த  வேளாண் துறை விளக்கம்

தஞ்சாவூர், டிச.21 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச. மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,  “பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 6,200 எக்டேர் சம்பா மற்றும் தாளடி நடவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், துவரங் குறிச்சி மற்றும் சூரப்பள்ளம் கிராமங்களில் நிரந்தரப் பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது.  தற்போதைய பருவநிலை மாற்றங் களால் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது. இவை நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு, அவற்றில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதினால், இலைகள் வெள்ளை நிறமாக மாறி இலைகள் காய்ந்து விடுகிறது.  இதன் தாக்குதல் வயல் ஓரங்களிலும், அதிக தழைச்சத்து யூரியா உரம் இட்ட பகுதி களிலும் அதிகமாக காணப்படும். இதன் தாக்குதலை கட்டுப்படுத்திட வரப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண் டும்‌. தழை சத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவு மேல் இடாமல், தேவையான அளவை மூன்று முதல் நான்கு முறையாக பிரித்து இட வேண்டும். விளக்கு பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிர விட்டு தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.  முட்டை ஒட்டுண்ணியான டிரைகோகி ரம்மா கைலானிஸ் ஏக்கருக்கு 2 சிசி  அளவு நடவு செய்த வயலில் விட்டு முட்டை குவி யலை அழிக்கலாம். மூன்று அடி உயரம் கொண்ட குச்சிகளை பறவை குடில்களாக அமைத்து தாய் பூச்சிகளை பறவைகள் பிடித்து உண்ண வழிவகை செய்யலாம்.  இவ்வாறு ஒருங்கிணைந்த முறைகளை கையாண்டால் ரசாயன பூச்சிக்கொல்லி களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது” எனத் தெரிவித்துள்ளார்.