districts

img

ஏவிசி கல்லூரி மாணவிக்கு விருது

மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறையின் மூன்றாமாண்டு மாணவி தாரணிக்கு “சிறந்த கேடட் விருது 2021” கேட்ஸ் வெல்பர் சொசைட்டி மூலம் வழங்கப்பட்டது. இவ்விருதினை என்சிசி குழு தளபதி திருச்சி தலைமையகத்தில் வழங்கினார். விருது பெற்ற மாணவியை கல்லூரியின் நிர்வாக அதிகாரி நீதியரசர் கே.வெங்கட்ராமன் பாராட்டினார். பொறியியல் கல்லூரியின் இயக்குனர் (நிர்வாகம்) முனைவர் எம்.செந்தில்முருகன், முதல்வர் முனைவர் சி.சுந்தர்ராஜ், கல்லூரியின் என்சிசி காப்பாளர் முனைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தார்.