மயிலாடுதுறை, டிச.24 - தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியே ஷன் மற்றும் வேர்ல்டு சிலம்பம் யூத் பெட ரேஷன் இணைந்து நடத்திய மாநில அளவி லான சிலம்பப் போட்டி திருச்சியில் நடைபெற் றது. இதில் ஏவிசி கல்லூரி சார்பில் நுண்கலை மன்ற மாணவர்கள் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் ப.அட்சயா, முதலாம் ஆண்டு விலங்கியல்துறை ர.நவதாரணி இரு வரும் மாநில அளவில் இரண்டாம் இடமும், முதுநிலை இயற்பியல் மாணவர் விஜயராக வன் மாநில அளவில் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், நுண்கலை மன்ற ஒருங்கி ணைப்பாளர்கள் ஜி.அமலன் ராபர்ட், எஸ்.சரண்யாதேவி, எஸ்.ரமேஷ், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.