மயிலாடுதுறை, மார்ச் 30- மயிலாடுதுறை மாவட்டம், மன்னன்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி கணினியியல் துறை சார்பாக ஆண்டுதோறும் மாணவர்களால் நடத்தப்படும் நுண் அறிவியல் கூட்டமைப்பான “ஸ்விப்ட்” அமைப்பின் நூல் வெளியீட்டு விழா மற்றும் 15-க்கும் மேற்பட்ட அறிவுசார் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கணினியியல் துறை தலைவர் எம்.முத்தமிழரசன் தலைமை வகித்தார். ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி கே.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 29 ஆம் ஆண்டின் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பின்னர் பல்வேறு அறிவுசார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.