மதுரை,ஆக.12-
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் (சுயநிதி பிரிவு) மின்னணுவியல் -தகவல் தொடர்பியல் துறை, ஐ.பி.சி.எஸ். குளோபல் சொல்யூசன் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மாணவர்களுக்கு ஆட் டோமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்க ளுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக் கப்படும். இதன் மூலம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் துறை சார்ந்த தொழில் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலாளர் எம்.விஜயராகவன், கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குநர் ச.பிரபு, துறைத்தலைவர் , பேராசிரி யர்கள் மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோபல் சொல்யூசன் தனியார் நிறுவனத்தின் கிளை இயக்குநர் கே.கார்த்தி, கிளை மேலாளர் கே.சரவணன் ஆகியோர் முன்னி லையில் கையொப்பமிடப்பட்டது.