ஆன்-லைன் அபராத முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரத்தநாடு கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரத்தநாடு ஆட்டோ சங்க செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். தலைவர் கருணாநிதி, பொருளாளர் இளையராஜா, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் அய்யப்பன், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.வசந்தகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.