தஞ்சாவூர், டிச.27 - பட்டுக்கோட்டையில் ஆட்டோ, லோடு ஆட்டோ ஓட்டுநர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களை சிஐடியுவில் இணைத்துக் கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் ஆட்டோ-லோடு ஆட்டோ (சிஐடியு) சங்கத்தின் கிளை அமைப்புக் கூட்டம், செந்தில்குமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் நோக்கம் பற்றி சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் விளக்கவுரை யாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எம். செல்வம், தொழிற்சங்கத் தலைவர் எஸ். கந்தசாமி, முறைசாரா தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சோமசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில், சங்கத்தின் கௌரவத் தலைவராக எஸ்.கந்தசாமி, ஆட்டோ சங்கத் தலைவராக என்.குஞ்சிதபாதம், செயலாளராக என்.நாடிமுத்து, பொரு ளாளராக வி.ராஜா, துணைத் தலைவ ராக ஆர்.தங்கதுரை என்ற நாகமுத்து, துணைச் செயலாளராக சி.பாலு, லோடு ஆட்டோ சங்கத் தலைவராக செந்தில் குமார், செயலாளராக இளங்கோவன், பொருளாளராக ஏ. மணிகண்டன், துணைத் தலைவராக எஸ்.பழனிவேலு, துணைச் செயலாளராக எஸ்.பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆட்டோ, லோடு ஆட்டோ நிறுத்துவ தற்கு ஸ்டாண்ட் ஏற்படுத்தி தரவேண்டும். அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கான நல வாரிய பதிவிற்கு. லைட் பேட்ஜ் வேண்டு மென கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.