தஞ்சாவூர், ஜூலை 8-
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும் என்று பட்டுக் கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கால்நடைகள் வளர்த்து வரும் பொதுமக்கள் சிலர், தங்களது வீட்டில் வளர்க்கும் மாடு களை எவ்வித பராமரிப்புமின்றி நகரின் முக்கிய சாலையில் தினமும் சுற்றித் திரிய விடுகிறார்கள்.
இதனால் போக்கு வரத்துக்கு இடையூறும் விபத்துகளும் ஏற்படுகின்றன. பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகள், சாலைகளில் சாணம் இடுவ தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள காய்கறிகள், பழங்கள், பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் வைத்திருக்கும் பொருட்களையும் மாடுகள் சேதப்படுத்துகின்றன. சாலை யில் படுத்துக் கொண்டு போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத்து கின்றன. இதுகுறித்து நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
கடந்த காலங்களில் தெருவில் சுற்றும் மாடுகள் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு அபராதம் விதித்து உரி மையாளர்களிடம் ஒப்படைக்கப்பட் டது. இருப்பினும் கால்நடை வளர்ப்ப வர்கள் மீண்டும் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றித் திரிய விடுகிறார்கள். தெருவில் சுற்றும் மாடுகளினால் ஏற்படும் தொல்லைகள் குறையவில்லை.
எனவே பட்டுக்கோட்டை நகர பகுதி யில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை தொழு வத்தில் பராமரிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூ றாகவும், விபத்துகள் மற்றும் பொருட் கள் சேதம் ஏற்பட காரணமாகவும் இருக்கிற சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி மூலம் ஏலம் விடப்படும். அல்லது கோசாலை யில் ஒப்படைக்கப்படும் என கூறப் பட்டுள்ளது.