நாகப்பட்டினம், ஆக.18 -
திருநெல்வேலி மாவட்டம் நாங்கு னேரியில் பட்டியல் இன மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கடை தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்டத் தலைவர் வினோத் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ப.சுபாஷ் சந்திரபோஸ், வழக்கறி ஞர் கு.காளிதாசன், சிபிஎம் நாகை வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் டி.அருள்தாஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
கும்பகோணம்
கும்பகோணம் காந்தி பூங்கா அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநகரச் செயலாளர் பழ.அன்புமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.சிவகுரு, சிஐடியு மாவட்டத் தலைவர் என்.கண்ணன், மாநகரச் செய லாளர் கே.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட் டத் தலைவர் ஜி.பழனிவேல் தலைமை யில் வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் கே.தமிழ்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு, ஒன்றிய செயலா ளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற் றனர்.