districts

img

மதுரையில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட ஊழியர் மீது தாக்குதல்; ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்/திருவாரூர், ஜன.8 -  மதுரை மாவட்டம், மேலூர் அருகே சேக்கிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மக்களைத் தேடி மருத்து வத் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர் தனலட்சுமி மற்றும் அவரது கணவர் மீது  ஜனவரி 4-ஆம் தேதி நடைபெற்ற வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் சாய் சித்ரா, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டத் துணைச் செயலாளர் க.அன்பு அ.ராஜா, அ.செல்வம், ஆர்.காதர் உசேன் உட்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் அமைப்பின் தலைவர் செல்வி, செயலாளர் மணிமொழி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பிரேமா, சிஐடியு  இரா.மாலதி,கே.பி.ஜோதிபாசு உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.