நியூஸ் கிளிக் செய்தி ஊடகம் மீது ஒன்றிய மோடி அரசு நடத்தியுள்ள தாக்குதல், முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவை, கைது நடவடிக்கை, ஊடகங்கள், பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை முழுமையாக பறிப்பதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாவட்டத் தலைவர் அர்ஜுன், மாவட்டச் செயலாளர் சந்துரு உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.