பேராவூரணி, ஏப்.15- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அட்லாண்டிக் சர்வ தேசப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு பள்ளி தலைவர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். தாளாளர் ஜனனி சீனிவாசன் முன்னிலை வகித்தார். முதல்வர் எம்.சிலம்புச்செல்வன் வரவேற்றார். நிகழ்ச்சியில், தன்னம்பிக்கை பேச்சாளரும், வின் யுவர் வீக்னஸ் மோடிவேஷன் அகாடமி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான டாக்டர் ஐ.ஜெகன் கலந்து கொண்டார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.