புதுக்கோட்டை, ஆக.16-
புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஒரு பெண் பெட்ரோல் பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு பெண் தனது மகளுடன் அங்கு வந்தார். அவரது கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் இருந்தது. இதனைக் கண்ட போலீசாரும், அரசுத் துறை அலுவலர்களும் அவரிட மிருந்த பெட்ரோல் பாட்டிலைப் பறித்தனர்.
தொடர்ந்து அவரிடம் ஆட்சியர் மெர்சி ரம்யா பேசுகை யில், அன்னவாசல் அருகே புல்வயல் பகுதியைச் சேர்ந்த சரிதா, தனது வீட்டுக்குச் செல்லும் பொதுப் பாதையை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதை கேட்கப் போனால் மிரட்டல் விடுப்பதாகவும் கூறி னார். இதுகுறித்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சி யர், மறுநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருமாறும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.