districts

img

மதுரையில் சு.வெங்கடேசனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்!

மதுரை, மார்ச் 20-  திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் மதுரை நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அறிமுக  கூட்டம் திமுக மாநகர் குழு சார்பில் பசுமலை யில் செவ்வாயன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஒச்சுபாலு தலைமை வகித்தார். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கோ. தளபதி, திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக மாநில தணிக்கை குழு  உறுப்பினர் வி.வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்து ராம லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டன

மதுரையின் வெற்றி இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்

நிகழ்வில், வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோ.தளபதி பேசுகையில், ‘‘மதுரை தொகுதியின் வெற்றி தான் தமிழகம்  மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எதிரொ லிக்கும். அந்த வகையில் இந்திய கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆத ரவு பெற்ற வெற்றி வேட்பாளர் சு.வெங்க டேசனை அதிக வாக்குகள் பெற்று வெற்றி  பெற நாம் துணை நின்று பாடுபட வேண்டும்’’ என்று பேசினார்.  திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பெ.குழந்தைவேலு பேசுகை யில், ‘‘நம்முடைய வேட்பாளர் ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமான வேட்பாளர். குறிப்பாக நாடாளுமன்றத்தில் பாஜகவை தன்னுடைய பேச்சால் பயமுறுத்திய வேட்பா ளர். அந்த அளவிற்கு மக்கள் பிரச்சனைக்காக  பாடுபடக் கூடியவர். இந்தியாவில் விமான நிலையம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளி களுக்கு விற்பனை செய்து வருகிறது. மதுரை யில் கூட ரயில்வே மைதானத்தை தனியார்  பெரும் முதலாளிகளுக்கு விற்பனை செய்ய  நினைத்தார்கள். இன்றைக்கு அதை தடுத்து நிறுத்தி பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர் சு.வெங்கடேசன். அவரை போன்றவர்கள் வெற்றி பெற வேண்டும் நம் தலைமை சொல்லியுள்ளதை போல இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களை வெற்றி பெற செய்திட வேண்டும்’’ என்று பேசினார். பாஜகவை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக  மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினர் வி. வேலுச்சாமி பேசுகையில், ‘‘நாடாளுமன்றத் தில் தன்னுடைய முயற்சியால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் தான் நம்முடைய வேட்பாளர் சு.வெங்கடேசன்.  தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக  ஒன்றிய அரசு இழைக்கும் அநீதிகளுக்கு எதி ராக இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதிலும் மதுரையில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி  பெற வேண்டும். எதையும் தைரியமாக நாடா ளுமன்றத்தில் பேசக்கூடியவர் சு.வெங்க டேசன். அந்த வகையில், கடந்த முறை அவர்  வெற்றி பெற்ற வாக்குகள் வித்தியாசத்தை விட அதிகப்படியான வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்றார். 

மதுரையின் தொன்மைகளை பாதுகாக்கும் வேட்பாளர் 

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் பேசு கையில், ‘‘இது சு.வெங்கடேசன் அவர்கள் அறிமுக கூட்டம் என்பதை விட ஆக்கப் பூர்வமான பணிக்கான செயல் வீரர்கள் கூட்டம் என்று சொல்ல வேண்டும். ஏற்க னவே சு.வெங்கடேசன் அவர்கள் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக செயல்பட்டு நாடாளுமன்றத்தில் முன்னணி வரிசையில் உள்ளார். வெங்கடேசன் அவர்கள் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளையும் வர லாற்றில் பதிவு செய்யக்கூடிய அளவிற்கான  பணிகளையும் செய்துள்ளார். கீழடி அக ழாய்வு முழுமை பெற்று அங்கு கண்டுபிடிக்  கப்பட்ட பொருட்கள் அத்தனையும் அருங் காட்சியக இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மதுரையின் சிறப்பை, இலக்கிய பெருமை யை தென்கிழக்கு ஆசியாவின் ஏதென்ஸ் என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட மதுரை மாநகருக்கு சிறந்த  வேட்பாளர் யார் என்றால் சு.வெங்கடேசன் தான் என்று மனம் திறந்து பாராட்டுகிறேன். அந்த வகையில் தமிழகம் மற்றும் மதுரை யின் தொன்மைகளைப் பாதுகாத்திட ஒரு வேட்பாளர் நமக்கு கிடைத்திருக்கின்றார்’’ என்றார். முன்னதாக கூட்டத்தில், திமுக தலைமை யிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை வெற்றி  பெறச் செய்ய திமுக கூட்டணி தலைமை யிலான கட்சிகள் ஒன்றிணைந்து பாடுபடு வோம்; வாக்குப்பதிவு நாளன்று நம்முடைய  ஜனநாயக கடமையை முழுமையாக நிறை வேற்றி, சர்வாதிகாரம் மிகுந்த ஒன்றிய பாஜக  அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், தனசெல்வம், துணைச்செயலாளர்கள் சின்னம்மாள், மூவேந்திரன், ராகவன், மாவட்டப் பொருளா ளர் முருகவேல். இளைஞர் அணி அமைப்பா ளர் செளந்தரராஜன், மாணவரணி அமைப்பா ளர் அன்பு என்ற துரை கோபால்சாமி, இலக்கிய அணி துணைத்தலைவர் திராவிட மாரி, பகுதி செயலாளர்கள் தவமணி, அறிவு நிதி, குரும்பன், காவேரி, வட்டச் செயலா ளர்கள் ராஜேஷ், கருப்புராஜ், பவர் மணி கண்டன், காத்தவராயன் தொகுதி பார்வை யாளர்கள் சுதாகர், திவாகர், கம்பம் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், துணை மேயர் தி.நாக ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஜா.நரசிம்மன், அ.ரமேஷ், ம.பால சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.