districts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை பொதுமக்கள் கடும் அவதி

மயிலாடுதுறை, ஜூலை 9 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர், பொதுக் கழிப்பறை வசதி கள்கூட இல்லாததால் அன்றாடம் பல்வேறு தேவை களுக்காக வரும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளா கின்றனர். தரங்கம்பாடி வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வட்டத்திற்குட்பட்ட பகுதி களை சேர்ந்த கிராமங்களி லிருந்தும் குறிப்பாக சேத் தூர், பெரம்பூர், கீழையூர்,  வடகரை, கீழப்பெரும் பள்ளம் ஆகிய நீண்ட தூர  தொலைவிலுள்ள பகுதிகளி லிருந்தும் 200-க்கும் மேற்பட்டோர் வந்து செல் கின்றனர். அதிலும் பெண்கள், முதியவர்கள் அதிகளவில் வந்து செல்வதை காண முடியும். பேருந்துகள் மூலம்  வருபவர்கள் பொறையார் புதிய பேருந்து நிலையத்தி லிருந்தும், பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் காத்தான்சாவடியிலிருந்தும் சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடந்து வட்டாட்சியர் அலுவ லகம் வருகின்றனர். அப்படி  வருபவர்களுக்கு தாகம் ஏற்பட்டால் குடிக்க குடிநீர் வசதி இல்லை. மேலும் இயற்கை உபாதைகளை கழிக்க பொதுக் கழிப்பறையும் இல்லாததால் கடும் சிர மத்தை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்றனர். ஏற்க னவே இருந்த குடிநீர் டேங்க் குப்பையோடு குப்பையாக ஓரங்கட்டப்பட்டு கிடக் கிறது. இதுகுறித்து வட்டாட்சியரிடம் பலரும் முறையிட்டும், அலட்சியப் போக்கே தொடர்கிறது என  பொதுமக்கள் வேதனை யுடன் கூறுகின்றனர். வட்டாட்சியர் இனியாவது நடவடிக்கை எடுத்து குடி நீர் வசதியையும், பொதுக் கழிப்பிட வசதியையும் ஏற்படுத்தி தருவாரா?