இராமநாதபுரம், ஆக.6-
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே சி.கே.மங்கலம் பிளாட்டினம் பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்ற சிஐடியு சங்க அமைப்பு கூட்டம் மூத்த தோழர் ஏ.நாகநாதன் தலைமையில் நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, விவசாயத் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு, பஞ்சாலை சங்க மாவட்டச் செயலாளர் வெங்கடசுப்பிரமணியன், சிபிஎம் தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் தலைவராக எம்.பழனிச்செல் வம், செயலாளராக எம். என்.முருகேசன், பொருளாளராக சசிகுமார், துணை நிர்வாகிகளாக முனியராஜ், பெஞ்ச மின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மூடப்பட்டுள்ள பிளாட்டினம் பஞ்சாலையை திறக்க வேண்டும் தொழிலா ளர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.