திருச்சிராப்பள்ளி, ஜன.8 - தமிழ்நாடு பாரத் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்க முத லாம் ஆண்டு மாநில மாநாடு மற்றும் புதிய உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் திருவா னைக்காவலில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில துணைத்தலைவர் கிருஷ் ணன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் வேல்முருகன், மாநில செயலாளர் சுரேஷ், மாநில துணைத்தலைவர் ஞானமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். காலாவதியான சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூ லிப்பதை கைவிட வேண்டும். சுங்கச் சாவடியில் ஓய்வெ டுக்கும் ஓட்டுநர்கள் மற்றும் லாரிகளுக்கு உரிய பாது காப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். சாலைகளை முறையாக பராமரிக்க வேண் டும். ஆன்லைன் அபரா தத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநில பொருளா ளர் ரமேஷ் நன்றி கூறினார்.