districts

img

குடுமியான்மலை அண்ணா பண்ணையில் புதுக்கோட்டை ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை, ஆக.1-

        புதுக்கோட்டை மாவட்டம் குடுமி யான்மலையில் உள்ள அண்ணா பண்ணை  மற்றும் அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா செவ்வாய்க்கிழமை ஆய்வு  மேற்கொண்டார்.

         உற்பத்தி செய்யப்படும் உயிர் உரங்கள்  குறித்தும், உரங்களை உபயோகிக்கும் முறைகள், விவசாயிகளுக்கு உரச்செலவு  குறைந்து 15 முதல் 20 சதவீதம் வரை மக சூல் அதிகரிப்பது, இங்கு விளைவிக்கப் படும் கம்பு பயிரின் ரகம் மற்றும் பயிர்  களின் வளர்ச்சி நாள் குறித்தும் கேட்ட றிந்தார். பின்பு கேழ்வரகு (ராகி) விதை உற்பத்தி பண்ணைக்கான நடவுப் பணி களை பார்வையிட்டார்.  

     வேளாண்மைத்துறையின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறவும், தோட்டக் கலைத் துறையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பழ மரக்  கன்றுகளை நடவு செய்து கூடுதல் வரு மானம் ஈட்டவும் விவசாயிகள் முன்வர வேண்டும் என அறிவுறுத்தினார்.