திருவாரூர், செப்.13- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிழலகங்கள் சுகாதாரமின்றி, புதர்கள் மண்டி உள்ளது. இதைச் சீர மைக்க வேண்மென சிஐடியு திருவாரூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்புறம் வாயில் பகுதியான திருவாரூர்- தஞ்சாவூர் சாலையில் எதிர்ப் புறம் அமைந்துள்ள பேருந்து நிழலகம் பராம ரிப்பின்றி மிக மோசமாக உள் ளது. இருக்கைகள் இல்லை. ஆட்சியர் அலுவலகம் இடது புறமும் தண்டலை ஊராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் பேருந்து நிழலகத்தின் மேற்கூரை சிதிலடைந்து உடைந்து மோசமான நிலையில் உள் ளது. மாவட்ட ஆட்சியர் அலு வலகம் செல்லும் சாலை மற் றும் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் அலுவலகம் செல்லும் சாலைகளை இணைக்கும் தேசிய நெடுஞ் சாலை உயரமாக இருப்ப தால் அலுவலகத்தில் இருந்து சாலைக்கு வரும்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் தடு மாற்றத்துடன் சாலையில் பயணிக்கும் நிலை உள்ளது. இந்த இரு இடங்களிலும் விபத்து ஏற்படாத வகை யில் சாலையை சமப்படுத்தி வேகத்தடை அமைக்க வேண்டும், பேருந்து நிழ லகங்களையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும் சிஐ டியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், தலைவர் எம்.கே.என்.அனிபா ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தை வலி யுறுத்தியுள்ளனர்.