நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு நாகப்பட்டினம், அக்.29 - நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் “சட்டமன்ற நாயகர் கலைஞர்” கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கரைப்பேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி, மாவட்ட ஆட்சி யர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகி யோர் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தமிழக அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கருத்த ரங்கில், சமத்துவம் என்னும் சமுதாய புரட்சி, கலைஞரின் சாதனைகள், கலைஞர் ஆட்சி யில் அற்புத திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அரசு தலைமைக் கொறடா ரொக்கப் பரிசு களை வழங்கினார்.