districts

குடியிருப்பு மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

தஞ்சாவூர், ஆக.18 -  

     தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் உக்கடை ஊராட்சி, சேர்மாநல்லூர் கிளை  சார்பில், உக்கடை கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுக்கும்  போராட்டம் நடைபெற்றது.

     சேர்மாநல்லூர் கீழத்தெருவில் வசித்து வரும் சுமார்  50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடியிருப்பு மனைப் பட்டா வழங்க வேண்டும். கீழத்தெரு மற்றும் சுடு காட்டு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.  நூறு நாள் வேலையை பாகுபாடு இல்லாமல் அனை வருக்கும் வழங்க வேண்டும். அரசு வழங்கும் பயிர்  இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அனைவருக் கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். வறுமைக்கோட்டி ற்கு கீழ் வாழும் மக்களை முறையாகவும் பாரபட்சமின்றி யும் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    கிளைச் செயலாளர் எஸ்.அய்யா சாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், மாவட்டக்  குழு உறுப்பினர் எம்.மாலதி ஆகியோர் பேசினர். ஒன்றி யக் குழு உறுப்பினர்கள்  பங்கேற்றனர்.