districts

திருநாகேஸ்வரத்தில் மக்கள் திரண்டதால் ஆக்கிரமிப்பு அகற்றுதல் ஒத்திவைப்பு

கும்பகோணம், ஆக.3-

    திருநாகேஸ்வரத்தில் மக்கள் திரண்ட தால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்தி வைக்கப்பட்டது.  

    கும்பகோணம் அருகே திருநாகேஸ் வரம் நாகநாதசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான இடங்க ளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக மடவிளாகம், தோப்புத் தெரு, மணல்மேட்டுத் தெரு ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் வசிக்கும்  பலர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் உள்ளதாகக் கூறப் படுகிறது. அவ்வாறு நீண்டகாலமாக வரி செலுத்தாத 39 வீடுகளை அப்புறப்படுத்த போவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

   அதன் பேரில் வருவாய்துறை அதிகாரி கள் இந்து சமய அறநிலையத்துறை அதி காரிகள் காவல்துறையினர் என 100-க்கும் மேற்பட்டோர் நாகநாத சாமி கோவிலுக்கு காலை முதல் வரத் தொடங்கினர். பொக் லைன் இந்திரம் தயார் நிலையில் இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணல் மேட்டு தெருவை சேர்ந்த  நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் மணல்  மேடு தெருவுக்கு செல்லும் வாயில்புற மான திருநாகேஸ்வரம் தெற்கு வீதியில் குவிந்தனர்.

    இதனால் கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் வரி கட்டாமல் இருக்கும் குடி யிருப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற  முடிவு செய்திருந்த இந்து சமய அறநிலை யத்துறையினர் தங்களது ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை சில நாட்களுக்கு ஒத்தி  வைத்தனர். இதைத்தொடர்ந்து திரு நாகேஸ்வரம் தெற்கு வீதியில் குவிந்தி ருந்த மக்கள் கலைந்து சென்றனர்.